Wednesday, January 26, 2011

குடியரசு தினம்!!!

யாருக்கு யார் சுதந்திரம் கொடுப்பது??
யாரை யார் அடிமைப்படுத்துவது????
புண்ணிய பூமியிலே..
புதுமை காண்பதற்கே...
எங்களை பெற்றெடுத்தவள் நம் பாரதத் தாய்!!!

உயிரிழந்து, உறவிழந்து
குருதி கசிந்து...
பல அவமானங்களுக்கு உள்ளாகிய போதும்....

ஒற்றை சிந்தனையோடு..
ஒட்டுமொத்தமாய் திரண்டு வந்து..
கட்டி காத்த கோடி..
நம் பாரத கோடி!!!

நம் உயிருக்குள் ஒன்றி விட்ட உறவு..
நம்மை அறியாமல் தோன்றுகிற ஒரு உணர்வு..
நாம் சுவாசத்துக்குள் ஊடுருவிய ஒற்றரை உயிர்..

உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் முடங்கி கிடந்தாலும்..
உள்ளமும் ஒரு நொடி சிலிர்க்கும்..இந்த தேசிய கொடிக்காய்....

கரங்கள் ஒன்று கூடட்டும்...
கனவுகள் நிஜமாகட்டும்..

கறைபடியாமல் பார்த்துக்கொள்வோம்
இந்த பொக்கிஷத்தை..!!!!
நம் பொற்க்கொடியை!!!

-அங்கயற்கண்ணி

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home