காதலர் தினமாமே!!! :-) :-)
கற்பனையின் இடுக்கில் கட்டப்பட்டு
"காதல்" எனும் சொல்லைத் தொலைவில் மட்டும் சந்தித்து
தனிமை வாசலின் வாசற்க்கதவின் பின்புறம் நின்று
ஒரு ஓட்டையின் வழியாய் வீதியைப் பார்த்தேன்
குறுகியப் பாதை
எதிரிலே ஒரு வீடு
இரண்டு சைக்கிள்
இவ்வளவு தானா உலகம்?
கண்ணாடியில் கூறிய ஆயிரம் விஷயங்களில்
இரண்டையாவது "இவனிடம்" கூறியிருக்கலாம்...
கற்பனையில் கடந்த பாதையைக் காண
ஒருமுறையேனும்
வாசற்கதவை உடைத் தெரிந்திருக்கலாம்...
இறைவன் வகுத்த இலக்கணத்தை
இன்னுமொருமுறை புரட்டியிருந்திருக்கலாம்...
காற்றுக்கு அசைகிற மரங்களும்
சிணுங்கத் துடிக்கிற தொட்டாஞ்சினுங்கியும்
காற்றிழுத்து இசைக்கிற புல்லாங்குழலும்
உணர்தலின் மொழியை உணர்ந்திருக்கையில்...
நான் மட்டும் எதற்கு அந்தப் படிக்கட்டில் தனியொருவளாய்
வானத்தை பார்த்தபடி?
போதும் இந்த வெறுமை!!!
ஆட்டிப்படைக்கும் தனிமை!!!
"தான்" என்ற பெருமை!!!
இருக்கட்டுமே இன்னொரு உரிமை...
ஓரமாய் மனதுக்குள் ஒலிக்கிறது
ஒரு ஓசை!!!
எங்கேயோ??? எப்பொழுதோ??? கேட்ட வரிகள்...
காதல்-> பெண்களை இன்னும் அழகாக்குமாமே!!!!
அதையும் தான் பார்கலாமே!!! :P :P
-அங்கயற்கண்ணி
********Love U Mother Nature************
Happy Valentines Day!!!!!
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home