Sunday, February 13, 2011

கண்கள் வெறும் கருவி தான்!!!

கண்கள் வெறும் கருவி தான்!!!

உள்ளத்துமூட்டை உரசப்பட்டு
சட்டென உடையப்பட்டு
கசிந்து வரும் தண்ணீர்...
...கண்ணிலே கண்ணீர்!!!

எது உணர்த்த முடியும்?
ஒருவனின் உள்ளுணர்வை...
இதைவிட துல்லியமாக...

முதல் கண்ணீர், முதலை கண்ணீர்,
அனுபவக் கண்ணீர், ஆனந்தக் கண்ணீர்,
பெருமிதக் கண்ணீர், பேர்சொல்லாக் கண்ணீர்...

அழுகையில் ஆனந்தம் தேடுவோர்
இங்கு அதிகம்!!
அழுகையுடன் அன்றாடம் வாழ்க்கை நடத்துவோர்
அநேகம்...

அழுகை..
அர்த்தமுள்ளது...
அந்தரங்கம் அறிந்தது..

அழுது பார்
அழுகையின் அவலம் புரியும்
அதை ரசித்துப் பார்
மறுமுறை அழுதிடத் தோன்றும்!!!

-அங்கயற்கண்ணி

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home