Tuesday, August 14, 2012

அவனவனுக்கே அன்றி அடுத்தவனுக்கில்லை!!!

அடிமைத் தனம் அகண்ட நாள் எனக் கூறுகிறார்கள் !

சுதந்திர பூமி பிறந்ததென பறைசாற்றுகிறார்கள் !

நம்மை நாமே அடிமையாக்கி கொண்டு வாழ்ந்த நாட்கள் அவை..

சொந்த கூட்டுக்குள்ளே சிறைபட்ட சில ஆண்டு பறவைகள் ....

தவம் புரிந்தும் , தடை தகர்த்தும் ,

தடியடி பட்டும் , தலை உடைந்தும் ...

தாகம் தீர்ககாமல் தத்தளித்த தருணம் ...

மதங்கள் யாவும் ஒன்று சேர்ந்து ...

மனிதம் மட்டும் பரப்பி ...

மண்ணை காத்திட ..

மனங்கள் பல இணைந்தன ...

துப்பாக்கி சூட்டுக்கும் ,

தூக்கிலிடும் தூண்டலுக்கும்

துணிந்து நின்றது

இந்த இமயம் ..

இந்தியனின் இதயம் !

இனி எவனொருவன் எட்டி பார்த்தாலும் ..

எதேற்சியாய் கூட போகாது இவன் தன்மானம் ..


அவனவன் சுதந்திரம் அவனவனுக்கே அன்றி !

அடுத்தவனுக்கில்லை !!!

வாழ்க பாரதம்!

-அங்கையற்கண்ணி

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home