Friday, August 17, 2012

நீ யார்?

மூச்சிரைக்க ஓடி வந்தான் ...

வறண்ட தொண்டைகளில்
தோல்வி தொட நினைத்தாலும்
தொடர்ந்து ஓடிகிறான் ..
பயணத்தின் முடிவு
இறப்பாக மட்டுமே இருக்க முடியும்..
வாழ்கையிலே ..
எதை வாழ்ந்தான் என்பது மட்டுமே கேள்விகுறி!
அவனை கசக்கி எரிய ஒரு கூட்டம் !
அவனின் கால்களை முறிக்க ஒரு கும்பல்!
அவனின் தோளை தட்ட சில நட்பு !
அவனை தூக்கி பிடிக்க சில கைகள்!
அவன் பாதைகளில் முள்  விரித்து போராட்டம்!
அவன் பூக்களின் காம்புகளுக்கு ஈமச்சடங்கு!
அவனை மெண்டு விழுங்க வியாபாரம் நடக்கிறது!
அவன் கொண்ட அத்தனையையும் பொய்யாக்க போலி கூட்டம்!
காதுகளை செவிடாக்கி ,
கண்களை குருடாக்கி ,
வாய்ப்பூட்டை வலுவாக்கி ,
உணர்சிகளின் மூட்டையை முதுகில் சுமந்தபடி ..
மீண்டும் மூச்சிரைக்க ஓடுகிறான் ..
வழி மறித்து கேட்டுப்பாருங்கள் ..

நீ யார்? என்று!!!
தலை உயர்த்தி சொல்வான்
"நான் கலைஞன்" 
-அங்கையற்கண்ணி

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home