Monday, August 30, 2010

தமிழுக்கு நிகர் தமிழே தான்!!!


மூத்த மொழி..
நம் தமிழ் மொழி!!!
முறையான மொழி......
முகவரி தொலையாத மொழி!!
தமிழுக்கும்..
தமிழர்க்கும்..
இங்கு பஞ்சமில்லை!!
தமிழன் நெஞ்சில் என்றுமே
வஞ்சமில்லை!!
வாழிய தமிழ்!!!

தமிழ் வாசம் நுகர்ந்து திளைத்த தமிழச்சி
- அங்கயற்கண்ணி

Saturday, August 28, 2010

பாலா அவர்களுக்கு

25-Aug-10
I got a call from my friend Vinodh's mom.
She spoke to me with a sad tone.
Asked me to write a poem for her late mom!

Yes! Aunty..this is dedicated to ur mom!

அம்மா!!
ஆதியும் அந்தமுமாய் இருப்பவள்...
உணர்வுகளின் உறைவிடம்...
உயிர்கொடுக்கும் உன்னதம்...

ஒவ்வொரு முறை 'அம்மா' என்று
அழைக்கும்போதும்
நூறு தடவை 'என்னடா?' என்ற
ஓடி வந்தாயே!!
இன்று ஆயிரம் முறை 'அம்மா'
என்று அழைக்கிறோம்
ஆதரவு தர நீ இல்லையே!!

ஆறறிவு உயிரினங்கள் நாம்...
இந்த ஆறு உயிர்களுக்கு அறிவு புகட்டிய
ஆசான் நீ...

கண் கலங்க விட்டதில்லை நீ
எங்களை...
இன்று கண்ணீரிலே மூழ்கி கிடக்கிறோம்!!
எப்படி தாங்குகிறாய் நீ...

இயற்கையை பழிக்கவில்லை...
நடந்ததை எண்ணி வெறுக்கவில்லை...
ஒரே ஒரு கேள்வி!
எதற்கு இப்படி ஒரு பந்தம்?

நீ காட்டிய பாசத்திற்கும், பரிவிற்கும்
பஞ்சம் இருந்ததில்லையே!!!
நீ ஊட்டிய பாலுக்கும் கூட
பணிவு இருந்ததே!!

இன்னும் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்
உனக்கு பிரசவ வலி கொடுக்கும் பிள்ளைகள்
நாங்களாகவே இருக்க வேண்டும்!!

"பாலா"
உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும்
உணர்வுகளுக்குள் போராட்டம்!!

நீ மண்ணுக்குள் மறைந்தாலும்
உன் சந்ததியினரின்
அன்புக்குள் மறையவில்லை...

எங்களுக்குள் தெய்வமானவள் நீ...
உன்னுடைய இந்த பயணமும்
பிரகாசமாய் இருக்கட்டும்

பிரியவில்லை நாம்...
மரியவில்லை நீ...
அறியவைத்தாய்...
உன்
இறப்பும் கூட ஒரு இதிகாசம்!!!