Friday, October 29, 2010

இதயம் தொடுகிற வரிகளை பார்க்கும் பொழுது...மனதில் பொங்கும் வரிகள் தான் இவையோ?

Check this link before you proceed!

http://saranjirainbowcolony.blogspot.com/2010/10/blog-post_28.html

வருடங்கள் பல கடந்து போனாலும்
வயது பல தாண்டி போனாலும்...
வற்றாத ஒன்று..
அம்மாவின் ஆசை முத்தத்தின் எச்சில்!!!

...உயிர் கொடுத்து...
வாழ்க்கை கொடுத்து...
வாழ்வில் ஒலி கொடுத்து...

இந்த உலகுக்கு ஒரு
அதிசய சிசு கொடுத்த...

உங்கள் தாய்..
தீபரமனிக்கு...

வாழ்த்துக்கள் கோடி!
ஆசை வார்த்தைகள் கோடி!!
அனைவரின் அன்பு மொழிகள் கோடி!

அவர் சிந்திய கண்ணீர்
சிறிதும் வீணாகவில்லை...

சருகுகளும் கூட
"சரத்"ஐ கண்டு
சத்தம் போடாமல்...
சாந்தமாய் இருக்கும்..

சாதிக்க பிறந்த சிங்கத்துக்கு..
சலாம் போடுகிறோம் எல்லோரும்!

நீங்கள் வெல்வது சத்தியம்!

-அங்கயற்கண்ணி

Great Luck!!

Very Nice Article!!!
Really Nostalgic!!! :-)

Monday, October 18, 2010

தோழியின் பிறந்த நாளுக்கு!!



இன்று தேதி பதினெட்டு!!
நீ என்றும் ஒரு அழகான மொட்டு!!

நட்பிற்கு இலக்கணம்..
அன்பிற்கு அடித்தளம்........


இனிமையான உந்தன் குரல்!
OC Guitar இல் பதித்த உன் விரல்!

விழிகளின் காந்தம்!
உன் முகத்தில் உள்ள சா சா சா சாந்தம் :P

இந்த முப்பதாவது பிறந்த நாளை (:P)..
முழுதாக கழித்து விடு!!!

இன்னும் முன்னூறு ஆண்டுகள்
நீ வாழ போகிற வாழ்க்கைக்கு..
ஒப்பந்தம் போட்டு விடு!

கனவுகள் கொந்தளிக்கும்
உன் கலை கூட்டுக்குள்..
கவிதைகள் ஆயிரம் கலந்து போகட்டும்!!

நீ நேசிப்பது, நீ சுவாசிப்பது, நீ யாசிப்பது
எல்லாம் உனக்கே உனக்காய்...
தம்பட்டும் அடித்து கொண்டு....
தானே வரட்டும்...
உன்னை தேடி வரட்டும்!!
பாராட்டுகள் உனக்கு கோடி வரட்டும்!!

ஆயிரம் இருப்பினும்...
நீ என் ஆருயிர் தோழியடி!!!

உன்மேல் எனக்குள்ள உரிமையில்..
உரக்க உரைக்கிறேன் ஒரு முறை!!!

உறுதியாய் இரு!!
உயர போகும் உன் வாழ்க்கைக்கு....

உள்ளத்தடியிருளிருந்து  என் பாராட்டுகள்!!!

ஆனந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

உண்மை அன்புடன்
உன் தோழி,
அங்கயற்கண்ணி

Saturday, October 16, 2010



This is a history in my life!!! I may not be a good writer...but I can say..I am a genuine human being..My pen always wanted to write something my mind intructs...But I felt this day "28th of September 2010" my heart instructed/forced/requested my fingers to write d below...for a good cause...for "Hunger Free India Foundation". very happy to be a part of this...and best thing about this is..."I took notmore than 20 mins to complete all this"

They were used as placards, during the Human chainOn 2nd Oct 2010


Angay at her BEST ....sometimesss :-) :-)


1. பட்டினியும் இனி பறந்து போகட்டும்


2. புது உலகம் காண்போம் ..


3 பாரத தாயே ..


உன் பிள்ளைகள் அத்தனை பேருக்கும்


ஒரு வாய் ஊட்டி விடுவாயே


4 காந்தியும், பாரதியும்,


தன் தோள் தட்டி கொள்ளலாம்..


அவர் கண்ட கனவுகள்


நனவாக போவதை கண்டு..


5 சுயநலம் மறப்போம்!!


பிறர்நலம் சிறக்க


பொது நலம் புரிவோம்!!



6 பசியின் வலியே அறியாது போகட்டும்


இந்த சமுதாயம்



7 வாழ்வது ஒரு முறை ..


வாழ வைப்போம் பல தலைமுறை !!


8 ஒட்டி போன வயிறு


குழி பார்த்த கன்னம்


வெளுத்த உதடுகள்


எங்கள் உரத்த குரலை கண்டு


ஓடி ஒழியட்டும்!!



9. இருள் சூழ்ந்த உங்கள் கண்கள்


இனி அருள் சூழட்டும்!!!



10.இளைஞர்கள் இணைகிறோம்!!


இனியொரு விதி செய்கிறோம் !!



11.ஒரு கை பார்த்து விடலாம்


இந்த பட்டினி


எட்டி இனி


நம்மை பார்க்கிறதா என்று ..



12.உணவு இல்லாமல் உரக்க பேசுவது எப்படி?


உரிமை இல்லாமல் உறவு கூடுவது எப்படி?


உரக்க பேசு...


உறவு தான் நீயும் நானும்



13.விண்வெளியும்!!


கணினியும்!!


செயற்கைகோளும்!!


மட்டும் மல்ல நாட்டின் உயர்வில்


பசுமை பாரதம்!!


பசியிலா பாரதம்!!


தான் முதன்மையில்....



14 உணவை வீணாக்கி ..


உயிரை வீணாக்காதே...



15 மனித இனம்


உண்மையில் புனித இனம் ...


வாழ வைப்போம் !!


வாழ்ந்து காட்டுவோம்!!



16 சுவாசிக்கும் காற்றும் கூட


நினைவு படுத்தட்டும்


எங்கோ ஒர் மூலையில்


உனைப்போல் ஒருவன்


உணவின்றி உயிர் விடுகிறானென்று



17 பாசத்தோடு பரிமாறு


பசியில்லா இடம்பாரு


புசித்தவன் வாயும்


புகழ்ந்து தீர்க்கும்


உன் புகழ் பாடி!!


18 கை ஏந்தி நிற்கிற சிவந்த கைகளுக்கு..


ஏன் மறுக்கிறாய்???


இவன் தீர்மானித்தது அல்ல இந்த வாழ்க்கை..


நாம் தரம் இழந்ததால்


இந்த வீழக்கை


19


சொகுசு அடைவதில் சந்தோஷமா?


இல்லை பிறர் சோகம் களைவதிலா?


20


ஒவ்வொருவனும் தலைவனே ..


நின் மக்களுக்கு


சேவை செய்ய பிறந்த சேவகனும் அவனே!


21


நடத்தி காட்டுவோம் இக்கனவை !!


விரட்டி ஒட்டுவோம் பசியை !!


நம்புவோம் இந்த நிஜத்தை !!


22


பிச்சை பாத்திரமும்


அட்சய பாத்திரமாகட்டும்


23


பறவைகளுக்கு போட்டியாய் பரிமாறுவோமா????


24


பரவாயில்லை ..


கல் நெஞ்சு என்று நினைத்தேன் ..


ஆனால் கருவிலே


கருணையும் கருவுற்றிருகிறது இவர்களுக்கு ..


உதவ கரம் கொடுப்பதற்கு நன்றி ..


25


உணர்வுகளுக்குள் போராட்டமா ?


இல்லை உணவுக்காக ஆர்பாட்டமா ?


இது ஒரு அத்தியாவசிய ஆர்பாட்டதிர்கான அத்தியாயம் !!


26


மனம் சொல்லும் மொழியை கேள்


மறந்தும் கூட சொல்லாது ..


"உனக்கென்ன அக்கறை பட்டினியில் புரள்கிறவனை பார்த்து "


27


உனக்குள்ளும் ஒரு இறைவன்


இணைந்து இருக்கிறான்


"உதவ மறக்காதே"


28


பஞ்சத்தை ஒழிப்போம்!!


பகிர்ந்து வாழ நினைப்போம் !!


பட்டினிக்கு "Bye Bye"


மனித சங்கிலியில் "கை வை "


29


தூக்கி எறியும் உணவு


தூரத்து நண்பனுக்கு போகட்டுமே!


30


நம் பிள்ளைகளும் பழகி கொள்ளட்டும்..


பசியாற்றட்டும் ..


பரிமாறட்டும் ..


31


விதை ஒன்று நட்டுவிட்டோம்


இனி வியந்து போகும் இந்த வரலாறும் ..


32


கல்வியும் ..


கால் வயிறு கஞ்சியும் ..


கடைசி வரை கட்டாய தேவை ...


33


லஞ்சத்தை மட்டுமல்ல ..


பஞ்சத்தையும் ஒழிப்போம் ..

Sunday, October 10, 2010

This is ME!!!



I am a different SEED!!!


People want me to grow like them..


I am STRUGGLING, STRUGGLING & STRUGGLING


to withstand my nature....


Hoping great!!...


that......


I will grow as a Tree


like.....


How I WANT!!!


&


How I SHOULD!!!


-Angayarkanni Chandrasekar

Saturday, October 2, 2010

Dedicated to Mahatma!!!


"There are many causes that I am prepared to die for but no
causes that I am prepared to kill for"

"Modest, Truth, Ahimsa!!
First
person to hit ur mind is
"Mahatma Gandhi" -> the simple person...
Your
Foot Prints are carved very deep in our hearts...
Your words hitting our mind
often...
Your power of speech still making wonder!!
Fast!!! not only in
talk..but also in walk!!

You are the one - we need to worship!!
You are
the one - we need to follow!!
You are the one - we need to embrace!!
You are - Jus U!!

Never ever be replaced!!!

An Immortal soul!!!

A very
Happy B'day!!!! -> Gandhiji :-)