கண்கள் வெறும் கருவி தான்!!!
கற்பனையின் இடுக்கில் கட்டப்பட்டு
கூடி வாழுகிற பாக்கியம் தான்...
கண்ணீர் ஒன்று தான் என்றாலும்
வடிகிற கண்கள் வெவ்வேறு!
நான் யாருமில்லா
பாலைவனத்தில்
தள்ளப்படவில்லை...
ஓட்டுனர் இல்லா பேருந்தில்
பயணிக்கவில்லை...
ஆனால்..
தனிமை என்னை தவறாய்
புரிந்து கொண்டது...
தாள்களில் எழுதப்படுகிற வார்த்தைகள்
மறைந்துபோகின்றன...
என் ஓவியத்தின் வண்ணங்கள்
அழிந்துவிட்டன...
தனிமையை நாடினேன்...
தனிமையை நேசித்தேன்...
தனிமையை பழகினேன்...
இன்று
தனிமையில் தத்தளிக்கிறேன்...
கோடி மக்கள் குவிந்திருப்பினும்
தனிமை என்னை தாக்குகிறது...
நான் வாழத்தெரியாது போகிறவளா?
இல்லை
வாழ்வை இழந்து வாழ்கிரவளா?
கேள்விக்குறி என்கிற
வளைந்த கம்பியில் மட்டும் பயணிக்கிற
கம்பிளி பூச்சியானேன்...
வினாக்களுக்குள் விடைத் தேடி தேடி
வீசுகின்ற காற்றைக்கூட
சுவாசிக்காது போனேன்...
என் கைப்பிடித்து சென்ற கற்பனைகளை
கை கழுவி விட்ட பாவி நானே தான்...
வட்டத்துக்குள் வட்டமிட்டு
சுருக்கிகொள்கிறேன் வாழ்க்கையை...
எனக்கு
நானே தோழி!!!
நானே எதிரி!!!
எல்லாம் புளித்துப்போன எனக்கு
தனிமையும் புளித்து போனது...
தனிமையில் தவிப்பதால் தான்
சூரியனும் கொந்தளிக்கிரானோ என்னவோ???
தனிமை என்னை தழுவியிருக்கிறது...
கூண்டுக்குள் அடைபட்ட கிளிக்கும்
எனக்கும்
என்ன பெரிய வித்தியாசம்...
பறந்து விரிந்து கிடக்கிறது பூமி
இருந்தும்...
கூன்டின்றி அடைப்பட்ட இந்தப் பிறவி
கிறுக்கி கொண்டிருக்கிறது
தனிமையில்...
உங்கள் தோழி,
அங்கயற்கண்ணி
எண்ணங்களுக்கு வடிவுகொடுத்து
விரல்களுக்கு வலைவுகொடுத்து
காகிதங்களுக்கு வரிகள்கொடுத்து
எழுத்துக்களுக்கு உயிர்கொடுக்கையில்
என்
கவிதையையும்
காதலித்திருக்கிறேன்...
நான் காதல் வலையில்
சிக்கித் தவிக்கும் பூச்சி அல்ல..
காதல் வலையில் பயணிக்கிற சிலந்தி...
என் பிறப்புக்குள்ளே
காதல் பிறந்திருக்கிறது...
என்னை பார்த்து கேட்கின்றனர்
24 வயது உனக்கு...
நீ யாரையும் காதலிக்கவில்லையா ????
என்று.....
உண்மை காதல் உருண்டு
உலகக்கடைசியில்
விழுந்ததாய் ஒரு எண்ணம்...
திடீரென
ஒரு தெளிவு...
இத்தனை நாள் நான் காதலித்தது
"என்னை" தான்
இப்பொழுதும் கூட
காதலிக்க தயார்...
"என்னை" காதலிப்பவனை!!!
உண்மை காதலுடன்,
அங்கயற்கண்ணி