அறிமுகமில்லா முகங்கள்,
புதிதாய் பள்ளியில் சேர்க்கப்பட்ட
சிறு பிள்ளயைப் போல் ஏக்கப் பார்வை...
நாட்கள் செல்லத் தொடங்கின,
உறவுகள் உரையாடியது,
வார்த்தைகள் பரிமாரப்பட்டது,
கவலைகள் ஆயிரம்
அழுத்திய போதும்
நண்பர்களின் உறவிலே
உன்னதம் தெரிந்தது..
பிறந்த நாள் வாழ்த்து அட்டை,
புது வருட வாழ்த்து மடல்,
அக்கரைக்கு பஞ்சமில்லை இங்கு...
தனிமை ஒரு பொழுதும் வாட்டியதில்லை....
கை குலுக்கினோம்,
கடலை போட்டோம்,
இன்று கலைந்து போகிறோம்...
ஒன்றாக இருந்த நாட்கள்
உலகையே மறக்க செய்தது..
வகுப்பறை கொண்டாட்டம்,
வாத்தியாரிடம் திண்டாட்டம்,
ரயில் நிலய உற்சாகம்,
திரை அரங்கு ஆர்ப்பாட்டம்...
அனைத்தும் கணவாய்
கண்ணிலே மிதக்கிறது....
புகைப்படங்களும் கையோப்பங்களும்
நினைவுகளை அதிகரிக்குமோ?
கண்ணீர் வர வழி அமைக்குமோ?
மிதமாய் இருந்த இதயம்
கணக்கிறது!!!!
பல நெஞ்சங்களை சுமப்பதால்!!!
வெறும் நினைவுகளை சுமந்து கொண்டு
பயணிக்க தயாரகிறோம்!!!
வருங்காலம் தெரிந்தவர் யார்?
என்றோ ஒரு நாள் பார்க்கையில்
கண்ணில் வழிந்து வரும்
அந்த ஒரு துளிக்காக...
ஒரு யுகம் வரை காத்திருப்போம்!!!
எங்கோ ஓர் மூலையில்
உன் நினைவுகளில்
நான் கலந்திருப்பேன்
என்ற நம்பிக்கையில்
வாழ்வைத் தொடர்கிறோம்...
இத்தனை நாட்களாக
வாழ்க்கை ஒட்டத்தை அறியாதிருந்தோம்....
இன்று உணர்கிறோம்
கல்லூரியின் இறுதி நாள்!!!
உண்மை அன்புடன்
அங்கயர் கண்ணி
*************என் நட்புக்கு சமர்ப்பணம்***************